அக்கறையில்தான் இருக்கிறாய் …..
மாணவன் ஒருவன் வேலை நிமித்தமாக
பக்கத்து ஊருக்குப் பயணப்பட்டான்.
பயணத்தில் ஒரு ஆறு குறுக்கிட்டது.
ஆற்றில் வெள்ளம் சுழித்துச் சுழித்து
ஓடிக் கொண்டிருந்தது.
அகண்ட ஆறு அது.
ஆற்றைக் கடக்கத் தயங்கி நின்று
கொண்டிருந்தான்.
ஆற்றின் அக்கறையில் துறவி
ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
உரத்த குரலில் அவரைக் கூப்பிட்டான்
மாணவன், "
ஐயா...
நான் ஆற்றின்
அக்கரைக்கு வருவது எப்படி?''
குரு சத்தமாகச் சொன்னார்..
மகனே...
நீ ஆற்றின்
அக்கறையில்தான் இருக்கிறாய்..