Tuesday, June 26, 2012

விதியின் கதை



போர்க்களத்தில் ஜப்பானிய வீரர்களிடம் மறுநாள் போரில் எப்படி தாக்குதல் நடத்துவது என்பதைப் பற்றி படைத் தளபதி உரையாற்றிகொண்டிருந்தார். எதிரணியினரை விட இவரது அணியில் ணியில் குறைந்த வீரர்களே இருந்தனர். தளபதிக்கு வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தாலும், போர் வீரர்களிடையே அச்சமும், சந்தேகமும் சூழ்ந்திருந்தது. அவர்களிடையே நம்பிக்கையை அதிகரிக்கச் செய்ய என்ன செய்வது என்று யோசித்தான் தளபதி.
அனைவரையும் அழைத்தான். " நண்பர்களே, நாம் போரின் இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டோம். தாக்குதலைத் தீவிரப் படுத்தினால் வெற்றி நமதே. ஆனாலும் குறைந்த வீரர்களைக் கொண்டு எவ்வாறு வெற்றி பெறுவது என்ற சந்தேகம் நம்மிடையே சூழ்ந்துள்ளது. அதனால் கடவுளை வேண்டிக் கொண்டு இந்த நாணயத்தை சுண்டுகிறேன். தலை விழுந்தால் தாக்குதலைத் தொடரலாம். வெற்றி நமதே. பூ விழுந்தால் தோல்வி. நாம் சரணடைந்து விடலாம்" என்றான்."தலைவிதியை நாணயம் தீர்மானிக்கட்டும்" என்றான்.
அனைவரும் ஆமோதித்தனர். கடவுளை வேண்டியவாறே சுண்டினான். விழுந்தது தலை. வீரர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி. தன்னம்பிக்கை பொங்க தாக்குதலைத் தொடர்ந்தனர். வெற்றி வாகை சூடினார்கள்.
போர் முடிந்ததும் தளபதியின் உதவியாளன் , "தலை விதியை யாராலும் மாற்ற முடியாது. நாணயம் காட்டியது சரியாக இருக்கிறது"என்றான். தளபதியும் சிரித்துக் கொண்டே சொன்னான் "சரியாகச் சொன்னாய்" என்றவாறே, நாணயத்தை அவனிடம் காட்டினான். "நாணயத்தின் இருபக்கங்களும் தலை"
கருத்து: நம்பிக்கை தான் வெற்றியைத் தருகிறது.