Friday, July 12, 2013

கீரைகள்

கீரைகள்

Courtesy: Dr.S.Senthil Kumar

தமிழர்களின் உணவில் இன்றியமையாத தாவிர உணவு கீரைகள். பச்சைப்பசேல் என்றிருக்கும் பல கீரை வகைகள் தமிழகத்தில் எங்கும் கிடைக்கின்றன. காய்கறிகளை பொதுவாக இலை, பூ, காய், தண்டு, கிழங்கு என்று 5 வகையாக பிரிக்கலாம். இவற்றில் எளிதாகவும், விரைவாகவும் ஜீரணமாவது கீரைகள் தான். தமிழகத்தில் மட்டுமல்ல, நமது தேசம் முழுவதுமே கீரைகள் விரும்பி உண்ணப்படுகின்றன. கீரைகளில் கால்சியம், இரும்பு, பீடா – கரோடின், விட்டமின் ‘சி’, ரிபோஃப்ளேவின் (விட்டமின் பி2), ஃபோலிக் அமிலம். இவை நிறைய உள்ளன. கீரைகளில் பச்சியம் நிறைந்திருக்கிறது. லெசித்தின் கரோட்டினாய்டு, அல்கலாய்ட், முதலியவைகள் மற்றும் ஆக்சாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், மாலிக் அமிலம் முதலிய கரிம அமிலங்களும் உள்ளன. கொழுப்பும், கார்போஹைடிரேட்டும் குறைவு. தாதுப்பொருட்களும், வைட்டமின்களும் அதிகம். எனவே வருமுன் காக்கும் உணவாக கீரைகளை சொல்லலாம்.
மலிவாகவும், எளிதாகும் கிடைக்கும் கீரைகளில் உடல் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் தேவையான அத்தனை சத்துக்களும் உள்ளன. எனவே தினமும் 50 லிருந்து 100 கிராமாவது கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் கீரை கொடுப்பது அவசியம்.
ஆயுர்வேதத்தின் படி, நாம் உண்ணும் உணவில் ஒரு பகுதி உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஒரு பகுதி ஜீரண சக்திக்கு உதவுகிறது. இன்னொரு பகுதி சத்தாக மாறி உடலை போஷிக்கிறது. மீதியுள்ள பகுதி மலமாக வெளியேறுகிறது. இந்த நான்கு செயல்பாடுகளுக்கும் காய்கறிகள் உதவுகின்றன. கீரைகள் குறிப்பாக ஜீரண சக்திக்கு மலத்தை வெளியேற்று என்ற இரண்டு பணிகளை செய்ய பயன்படுகின்றன. இதர இரண்டு செயல்பாடுகளுக்கு கீரைகள் அவ்வளவு பயனபடுவதில்லை. எனவே காய்கறிகளையோ, கீரைகளையோ, தனி உணவாக உண்பதை ஆயுர்வேதம் தவிர்க்கச் சொல்கிறது. ஆனால் நவீன ஆராய்ச்சிகளின் படி கீரைகளை தனியாக உண்பதால் பல நன்மைகள் கிடைக்கும். 15 நாட்களாவது கீரையை காலை உணவாக தனி உணவாக உண்பது நல்லது. கீரைகளை இரவில் சாப்பிடக்கூடாது என்கிறது ஆயுர்வேதம். இரவில் ஜீரண சக்தி குறைந்திருக்கும். தூக்கத்தாலும், இரவின் குளிர்ச்சியாலும் ஜீரண சக்கதி மந்தமாகிவிடும். இரவில் கீரை சாப்பிட்டால் கீரைப்பூச்சிகள் உண்டாகலாம். மலப்போக்கு, வயிற்று உப்புசம், வயிற்று இரைச்சல் முதலியன ஏற்படலாம்.
ஒவ்வொரு வகை கீரையிலும் ஒவ்வொரு வகை சக்திகள் உண்டு. எனவே தினசரி கீரைகள் உண்பது முடியாவிட்டால் அடிக்கடியாவது விதவிதமான கீரைகளை உணவில் சேர்க்க வேண்டும்.
கீரைகளை வாங்கு முன் கவனிக்க வேண்டியவை
வாங்கும் கீரை புதிதாக, பசுமையாக இருக்க வேண்டும். மஞ்சள் நிற கீரைகளை தவிர்க்கவும். இலைகள் வாடி, வதங்கி இருக்கக் கூடாது.
ஒட்டைகள் உள்ள கீரைகளை தவிர்க்கவும். இவை கிருமி தாக்குதலால் பாதிக்கப்பட்டவை.
பருவத்திற்கேற்ற கீரைகள்
சித்தர்கள், அந்தந்த பருவங்களுக்கு ஏற்ப, உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய கீரைகளை பட்டியலிட்டிருக்கின்றன. அவை
பருவம்
வசந்த ருது (கோடைக்காலம்) சித்திரை, வைகாசி
கிரீஷ் மருது (காற்றடிக்கும் மாதம்) ஆனி, ஆடி
வர்ஷா ருது (முன் மழைப் பருவம்) ஆவணி, புரட்டாசி
சரத் ருது (பின் மழைப் பருவம்) ஐப்பசி, கார்த்திகை
ஹேமந்த ருது (முன் பனிப்பருவம்) மார்கழி, தை
சிசிர ருது (பின் பனிப்பருவம்) மாசி, பங்குனி
தவிர்க்க வேண்டிய கீரை
அரைக்கீரை, புளிச்சை கீரை
அரைக்கீரை, கீரைத்தண்டு, சிறுகீரை, பருப்புக்கீரை, முள்ளங்கி கீரை
சிறுகீரை, பருப்புக்கீரை, வெந்தயக் கீரை, முள்ளங்கிக்கீரை, பசலைக்கீரை
அகத்திக்கீரை, சிறுகீரை, பசலைக்கீரை, கீரைத்தண்டு, (கபப்பிரகிருதிகள்), கபநோய்களுள்ளவர்கள் மழைக்காலத்தில் கீரைகளை தவிர்ப்பது நல்லது)
அகத்திக்கீரை, சிறுகீரை, பசலைக்கீரை, முள்ளங்கிக்கீரை
சிறுகீரை, பசலைக்கீரை, பருப்புக்கீரை
எல்லா பருவங்களிலும் சாப்பிடக்கூடிய கீரைகள்
பொன்னாங்கண்ணிக்கீரை, கொத்தமல்லிக்கீரை, புதினா, முருங்கைக்கீரை, மணத்தக்காளிக்கீரை, கரிசிலாங்கண்ணிக்கீரை, கறிவேப்பிலை.
கீரைகளை தவிர்க்க வேண்டிய காரணங்கள்
இரவில் கீரைகளை உண்ணக்கூடாது. தலைக்கு குளித்த நாட்களில், சோகை உள்ளவர்களும், ஆஸ்தமா, சைனஸ் போன்ற கபநோய்கள் உள்ளவர்களும் கீரையை தவிர்க்க வேண்டும்.
கீரை ஒரு சாத்வீக உணவு மாமிச உணவுகள், மீன் உணவுகளுடன் கீரையை சேர்த்து உண்ணக் கூடாது. மலச்சிக்கல் வயிற்றுக்கோளாறுகள் ஏற்படும்.
கீரைகளை சமைக்கும் முறை
சமைக்கு முன் கீரை இலைகளை ஆய்ந்து, சுத்தமான குளிர்ந்த நீரில் நன்கு அலச வேண்டும்.
வேக வைக்க, குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தவும். சமையல் சோடாவை சேர்க்கக் கூடாது. மாறாக சிறிதளவு புளித்தண்ணீரை தெளிக்கலாம்.
அரைக்கீரை
தமிழில் இதர பெயர்கள் – சிறுகீரை, கிள்ளுக்கீரை, அறுகீரை இந்தியா முழுவதும் பயிராகும் அரைக்கீரை 30 செ.மீ. (ஒரு அடி) உயரம் வளரும் இந்த கீரையின் இலைகளும், இளந் தண்டுகளுமே உண்பதற்கு ஏற்றவை. இவற்றை அறுக்க அறுக்க மீண்டும் வளர்ந்து செடியாகும். எனவே இந்த கீரை ‘அறுகீரை’ என்றும் சொல்லப்படுகிறது.
100 கிராம் அரைக்கீரையில் உள்ள பொருட்கள்
ஈரப்பசை – 87 கிராம், புரதம் – 2.8 கிராம், கொழுப்பு – 0.4 கிராம், மினரல்கள் (தாதுப்பொருட்கள்) – 2.4 கிராம், கார்போஹைடிரேட் – 7.4 கிராம், கால்சியம் – 364 மில்லிகிராம், பாஸ்பரஸ் – 52 மி.கி. இரும்பு – 38.5 மி.கி. கி.கலோரி – 44.
பயன்கள்
உடலுக்கு வெப்பத்தை தரும். உடலுக்கு பலமளிக்கும்
பிரசவமான பெண்களுக்கு சக்தியை தரும்
நரம்பு தளர்ச்சியை போக்க அரைக்கீரை சாற்றில் மிளகை ஊற வைத்து, உலர்த்தி தூளாக்கி தினமும் 1/2 தேக்கரண்டி தேனில் குழைத்து சாப்பிடவும்.
அரைக்கீரை காமத்தை தூண்டும். கசகசா, தேங்காய்ப்பால், குடமிளகாய் இவற்றுடன் அரைக்கீரை சேர்த்து சமைத்துள்ள ஆண்மை பெருகும்.
சித்தர் பாடல்
காய்ச்சல் குளிர்சன்னி கபநோய் பலபிணிக்கும்
வாய்ச்ச கறியாய் வழங்குங்கான் – வீச்சாய்க்
கறுவுமோ வாயுவிணங் காமமிக வுண்டாம்
அறுகீரை யைத்தின் றநி.
(அகத்தியர் குணபாடம்)
பொருள்
காய்ச்சல், குளிர் சன்னி, கபநோய்கள், வாயுக்கோளாறுகள் போன்றவை தீரும். இந்தக் கீரைக்கு காம உணர்வை அதிகரிக்கும் சக்தி உண்டு.
அரைக்கீரையை பருப்புடன் சேர்த்து 1 மாதம் சமை சாப்பிட்டால் சோகை மறையும்.
அரைக்கீரை விதைகளிலிருந்து ஒரு வித தைலம் எடுக்கப்படுகிறது. விதைகளை தண்ணீர் நீக்கிய தேங்காயில் நிரப்பி (தேங்காய் ஒரு கண்ணை திறந்து) பிறகு மரத்துண்டால் மூடி, சதுப்பு நிலத்தில் 40 (அ) 50 நாட்கள், புதைத்து வைக்கவும். பிறகு எடுத்து தேங்காய் உடைத்து அதில் உள்ளதை எடுத்து, நல்லெண்ணையுடன் கூட்டி எரித்து தைலம் வடித்து, தலையில் தேய்த்து முழுகி வர, தலை வலி தலை பாரம் போகும். தலை முடி கருகருவென வளரும். இந்த தைலம் கண்ணுக்கு குளிர்ச்சி தரும்.